Search This Blog

Thursday, 15 March 2018

இன்றைய சமூகமும் விவசாயிகளின் நிலையும்


இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்

தமிழா! உமக்கு சோறு போடும் விவசாயி தவிக்கிறான்!
அவன் நிலத்தில் வேலை செய்ய கூலி ஆட்கள் கிடைப்பதிலை!  
உற்பத்திசெய்த பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை!
வங்கியில் விவசாய கடன் கிடைப்பதில்லை!
அவனுக்கு சக மனிதக்கு கிடைக்கும் மரியாதை  கிடைப்பதில்லை!

தமிழா விவாசாயம் என்றாலே  வீணாபோனவன் என்று நினைக்கும் அளவிற்கு இன்றைய சமூகம் மாறிவிட்டது. அத்தகைய சமூகத்தை/மனிதர்களை பார்க்கும்போது எனக்கு பரிதாபமாகத்தான் உள்ளது. ஏனென்றால் அவர்களுக்கு புரிவதில்லை அப்படி நினைப்பதனால் அவர்கள் தாமே தனது தலையில் மண் வாரிபோட்டதற்கு சமம் என்று.
சில வருடங்களாக அவர்கள் அப்படி நினைத்ததால்தான் தற்போது விரைவில் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கோடு பெரும்பாலான விவசாயிகள் செயற்கை உரம் பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர். செயற்கை உரம் அதிகம் கலப்பதால் உணவே நஞ்சாக மாறுகிறது. அப்படிபட்ட நஞ்சு கலந்த உணவைத்தான் தற்போது பெரும்பாலானோர் உண்டு வாழ்கின்றனர். எனவேதான் அடிக்கடி மருத்துவமனை & மருந்து உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் நமது மக்கள். இதற்கெல்லாம் காரணம் சோறுபோடும் விவசாயிகளுக்கு உரிய மரியாதை தர மறுத்த சமூகமும் அரசும்தான். ஆனால் அப்படிபட்ட அரசை உறுவாக்கியது யார்? இச்சமூகம்தானே?  

என்று நம் சமூகம் விவசாயத்தையும் விவசாயியையும் வீண் என்று நினைத்ததோ அன்று முதலே அவர்களின் நிம்மதியையும் உடல் ஆரோக்கியத்தையும் இழந்து வருகின்றனர். இச்சூழலிலும் சில விவசாயிகள் விடா முயற்சியோடும் கடின உழைப்போடும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். அப்படிபட்ட விவசாயிகளின் முக்கியதுவத்தை உணர்ந்து அவர்களை ஊக்குவித்தால்தான் செயற்கை முறையில் பயிர் செய்யும் விவசாயிகள் இயற்கை முறைக்கு மாறுவார்கள். அப்படியோறு சூழல் நிலவும் பட்சத்தில் இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கை உயரும். மக்களின்  மனநிம்மதியும் உடல் ஆரோக்கியமும் பெறுகும்.

அரசும் அரசு அலுவலர்களும் ஒரு புறம் இருக்கட்டும் முதலில் மக்களாகிய நீங்கள் விவசாயிகளை மதிக்க கற்றுகொள்ளுங்கள். பிறகு விவசாயிகளுக்கும் பாமர மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் எதிரான அரசியல்வாதிகளை ஓட்டு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி அப்புறபடுத்திவிடலாம்.

இயற்கை விவசாயிகளை ஊக்குவித்து நமது தமிழ் இனத்தை காப்பாற்றுங்கள்!!!

#இயற்கைவிவசாயம் #விவசாயி

Friday, 9 March 2018

விவசாயம் என்பது தொழில் அல்ல வாழ்க்கை முறை

இயற்கை விவசாயி
விவசாயம் என்பது ஒரு தொழில் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது தொழில் அல்ல. மனித இனத்தின் வாழ்க்கை முறையாகும். வட இந்தியாவில் கோதுமை அதிகம் பயிர் செய்கின்றனர். ஆனால் தென் இந்தியாவில் நெல் அதிகம் பயிர் செய்கின்றனர். இதுவே மலை பிரதேசங்களில் ஆப்பில் போன்ற பழவகைகள் பயிர் செய்யப்படுகின்றன. காரணம் அவ்விடம் அமைந்துள்ள தட்பவெட்ப நிலை மற்றும் புவி அமைப்பு ஆகியவற்றிற்கு ஏற்றார்போல் அங்கு வாழ்பவர்கள் தங்களது உணவு தேவையை ஏற்படுத்திகொள்கின்றனர். அதற்கான பயிர் செய்யும் முறையும் வெவ்வேறு இடத்திற்கேற்ப மாறுபடுகின்றன. அவைகளை பயிர் செய்ய அவர்கள் மேற்கொள்ளும் முயர்ச்சிகளே (உடல் உழைப்பு) அவர்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கும். ஆக ஒரு விவசாயி முறையாக சூழலுக்கு ஏற்ப விவசாயம் செய்வானாயின் அவன் ஆரோக்கியமாக வாழ்வான். அதாவது இயற்கை முறையில் பயிரிட்டு அனைத்து உயிர்களையும் அறவனைப்பானாயின் அத்தகைய விவசாயி நோயுர வாய்ப்பே இருக்காது. அவன் வாழ்நாள் முழுவதும் மருத்துவரை நாட தேவையே இல்லை.

அது எப்படி சாத்தியம் என்று நினைக்கிரீர்களா? 100% சதவீதம் சாத்தியம். இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயி இரசாயன உரம் & பூச்சிகொள்ளிகளை பயன்படுத்தமாட்டான் . ஆகையால் அவன் உற்பத்தி செய்த பொருட்களில் இமியளவும் நஞ்சு இருக்காது. எனவே நஞ்சில்லா உணவை உண்டு அவன் ஆரோக்கியமாக இருப்பான். இன்னொரு விசயம்.. அவன் ஆரோக்கியமாக இருக்க தனியாக யோகா செய்ய வேண்டியதில்லை... உடற்பயிற்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் அவை அனைத்தும் அவனுடைய வாழ்க்கை முறையில் அடங்கிவிட்டது. அதாவது அவன் விவசாயம் செய்ய மேற்கொள்ளும் நடவடிக்கைகளே ஒரு உடற்பயிற்சியாகும். நகர வாழ் மக்கள் போல உடற்பயிற்ச்சி என்ற பெயரில் அவனுக்கு நேரத்தை வீணடிக்கும் தேவை வராது.

எனவே உண்மையான இயற்கை விவசாயியால் மட்டுமே முறையான வாழ்க்கை வாழ முடியும். அவர்கள் வாழும் வாழ்க்கை மட்டுமே நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையை தற்போது பிரதிபளிக்கிறது. எனவே அத்தகைய வாழ்க்கை முறை மூலம் உற்பத்தியாகும் பொருட்களை பயன்படுத்துபவர்களும் ஆரோக்கியமாக வாழும் வாய்ப்பை பெறுவார்கள். ஆனால் அத்தகைய விவசாயிகளுக்கு தேவையான அங்கிகாரம் கிடைப்பதில்லை என்பதை நினைத்தால்தான் வருத்தமளிக்கிறது.

#விவசாயம் #இயற்கைவிவசாயி #விவசாயி

Saturday, 3 March 2018

இலஞ்சத்தை ஒழிக்க வேண்டுமா? உன் கடமையை செய், பொறுமையாக இரு.

பொறுமையாக இருந்தால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?  என்ற கேள்வி தங்களுக்கு எழலாம். அது சாத்தியமே.. நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும் ஆனால் உங்கள் கடமைகளை செய்துவிட்டு. எடுத்துகாட்டாக உங்களுக்கு பட்டா தேவை என்று வைத்துகொள்வோம். அதனைப் பெற நீங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? முறையாக அரசு அலுவலகத்தில் சட்டப்படியான வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பம் அளிக்க வேண்டும். குறித்துரைத்த காலகட்டத்திற்குள் பட்டா வழங்கப்படவில்லை என்றால் அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கான காரணம் இலஞ்சம் என்றால் இலஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதுதான் தங்களின் முதல் கடமை. பட்டாவை சட்டப்படி பெற சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு கடிதம் மூலம் “அனைத்து தகுதியும் இருந்த பிறகும் இவ்வளவு நாட்கள் ஆனபிறகும் பட்டா வழங்கப்படவில்லை. எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் ......... பட்டா வழங்க வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பிவிடுங்கள். அதன் பிறகும் தங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதற்கான காரணங்கள் அடங்கிய கோப்பின் நகல்களை வழங்கக் கோரி அத்துறையின் பொது தகவல் அலுவலருக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பிவிடுங்கள். இதுதான் தங்களின் இரண்டாவது கடமை. 
ஆக இவ்விரண்டு கடமைகளையும்  செய்ய தாங்கள் பொறுமையாக இருக்க வேண்ட்டும். ஒவ்வொருவரும் இக்கடமையை செய்யும் வரை பொறுமையாக இருந்துவிட்டால் பட்டா மற்றும் இல்லை அனைத்து அரசு சான்றிதழ்களையும் இலஞ்சம் இல்லாமல் வாங்கிவிடலாம். 
இதெல்லாம் செய்யும் அளவிற்கு தங்களுக்கு பொறுமை இல்லையென்றால்.. மன்னித்துவிடுங்கள் நம் சமூகத்தை காப்பாற்றுவது கடினம்... குறிப்பாக உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே கேள்வி குறியாகிவிடும். இலஞ்சம் இன்னும் தழைத்தோங்கி சமூக விரோதிகளால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடும். இலட்ச கணக்கில் செலவழித்தும் தரமான கல்வி கிடைக்காது, தரமான மருத்துவ வசதி கிடைக்காது, தரமான உணவு பொருட்கள் கிடைக்காது. ஏனென்றால் உயிர்வாழ தேவையான அனைத்தும் இலஞ்சம் என்ற கரை படிவதால் அனைத்து துறைகளிலும் போலியானவர்கள் ஆதிக்கப் பெறுவர். அதனால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விகுறியாகிவிடும்.

நீங்கள் பொறுமையை கடைபிடித்து உங்கள் கடமையை செய்தால்தான்  இலஞ்சத்தால் கொழுத்துள்ள அரசு அதிகாரிகள் கன்னியத்துடனும், கட்டுப்பாடுடனும் செயல்படுவர் என்பதை நீங்கள் உணர வேண்டும். எனவே சிந்தியுங்கள்!!! உங்கள் கடமையை செய்யுங்கள்!!! பொறுமையை கடைபிடித்து இலஞ்சத்தை ஒழியுங்கள்!!!

குறிப்பு: நான் பொறுமையாக இருந்து இக்கடமைகளை செய்ததால் பல அரசு துறைகளிடம் இலஞ்சம் இல்லாமல் பட்டா உட்பட பல சேவைகளைப் பெற்றுள்ளேன். மற்றவர்களுக்கும் இவ்வழிமுறை மூலம் பல அரசு சேவைகளைப் பெற வழிவகுத்துள்ளேன்.

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...