Search This Blog

Showing posts with label பல்லுயிர். Show all posts
Showing posts with label பல்லுயிர். Show all posts

Saturday, 18 May 2024

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமிக்க அரசு நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுகிறார்கள், ஒரு சிலர்  அதனை விற்று அதன் மூலம் பணம் பார்க்கும்  வேளையில் ஈடுபடுகிறார்கள். அத்தகைய நபர்களுக்கு  மரங்கள் பற்றிய புரிந்துணர்வே இல்லை என்பதையே இது காட்டுகிறது. 

ஆனால் தெய்வ வழிபாடுகளில் மரத்திற்கு முன்னிடம் கொடுத்தது நம் தமிழர் மரபு. வாகை மரத்தை 'கடவுள் வாகை' என்றும், வேப்ப மரத்தை 'தெய்வம் சான்ற பாரரை வேம்பு' என்றும் சிறப்பிக்கிறது சங்க இலக்கியம். 

வேப்ப மரத்தை கடவுளாக பாவிக்கும் மக்கள் வாழும்  அதே தமிழகத்தில் ஒரு சிலர் வெட்டவும்  துடிக்கிறார்கள். அதுவும் அரசு புறம்போக்கில் உள்ள மரங்களை மனசாட்சியின்றி வெட்டுகிறார்கள். ஒரு சிலர் அரசு இடத்தில் உள்ள  மரங்களை  வெட்ட எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடனே இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லவிரும்புவது என்னவென்றால்  "முதலில் மரங்களை நட்டு அவைகளை வளர்க்க  கற்றுக்கொள்ளுங்கள்". 

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம் என்ற உண்மையை புரிந்துகொள்ளுங்கள். ஒரு மரத்தில் பலவகையான உயிரினங்கள் வாழ்கின்றன என்ற உண்மையை ஆறறிவுள்ள மனிதர்கள் உணர மறுக்கிறார்கள். மரத்தில் பல பறவையினங்கள் (ஈ இனங்கள் உட்பட) கூடுகட்டி வாழ்கின்றன. அதுமட்டுமல்லாமல் அதில் பல பூச்சி, வந்து இனங்கள் கூட மாற கிளைகளை வாழ்கின்றன. அதே போன்று மரங்கள் தரும் காய் கனிகள் மூலம் பல உயிரினங்களுக்கு (மனிதர்களுக்கும் ) உணவு தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆக மரங்கள் பல உயிரினங்களுக்கு  இருப்பிடமாகவும், உணவு அளிக்கக்கூடிய கொடையாகவும் திகழ்கின்றன. மேலும் மனிதர்களுக்கும் கூட கடும் வெயிலில் இளைப்பாற  நிழல்களை தருகின்றன என்பதை மனிதர்கள் உணர வேண்டும்.  


மேலே நான் சொன்னவை எதுவும் தங்களுக்கு  புரியவில்லை என்றாலோ ,  பைத்தியக்காரத்தனமான விளக்கம் என்று தாங்கள் கருதினாலோ, மேலும் படிக்கவும்,,,😁😁

அரசு இடத்தில் மரங்களை வெட்டினால் அது திருட்டுத்தனம் ஆகும். அரசு பொருளை திருடுவதோடு, காக்கா, குருவிகள் போன்ற பல வகையான உயிரினங்களின் இருப்பிடத்தடையும் திருடுவதாகும். எனவே மரம் வெட்டுதல் குறிப்பாக அரசு இடத்தில் அனுமதியின்றி  மரம் வெட்டினால் வெட்டுபவனுக்கு  தண்டனை உறுதி  என்ற சட்டபூர்வ உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். 

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம் என்ற உண்மையை உணர்ந்து, மரத்தை வெட்டுவதற்கு  பதிலாக மரங்களை வளர்ப்போம்! நம்முயிரையும், பல்லுயிர்களையும்  காப்போம்!


Saturday, 5 June 2021

காடு, மலைகள் அழிக்கப்பட்டால் நமக்கென்னவா?


உலக சுற்றுச்சூழல் தினமான (
5 ஜூன்) இன்றாவது நாம் சுற்றுச்சூழல் குறித்து விழிப்படைந்து இயற்கை அளித்த காடு, மலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை பாதுகாத்து அதனை நம்பி வாழும் பல்லுயிர்களை அரவனைத்து சுற்றுச்சூழலோடு இணைந்து வாழ்வதை கற்றுக்கொள்ள  வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இனியும் நாம் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணராமல் கண்மூடித்தனமாக செயல்படுவதை தொடர்ந்து கொண்டே இருந்தால் கொரோனா போன்ற கொடிய நோய்க்கு நம்மில் பலர் பலியாகக் கூடும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறையும்

காடு, மலைகள் அழிக்கப்பட்டால் நமக்கென்ன? அதில் உள்ள உயிரினங்கள்தானே அழியும் என்ற குருகிய எண்ணத்தில் கண்டும் காணாததுபோல் நாம் கடந்து சென்றால் நமது சுற்றுச்சூழல் அதி வேகமாக மாசடைந்து நாம் சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும் அசுத்தமாகி, நாம் உண்ணும் உணவும் நஞ்சாகிவிடும். அதன் விளைவு நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனா போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாவோம்.

நீர் தட்டுப்பாடு

ஏற்கெனவே  தமிழ்நாட்டில் பல இடங்களில் காடு, மலைகளை குவாரிகளுக்கு தாரைவார்த்துவிட்ட காரணத்தால்  நிலத்தடி நீர் மட்டத்தை தாண்டிய ஆழத்தையும் தாண்டி பள்ளம் பரித்து கனிமங்களை வெட்டிய காரணத்தால் நிலத்தடி நீர் நஞ்சாகியதோடு நில்லாமல்  நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டது. சில இடங்களில் நிலத்தடி நீர் வற்றியும் விட்டது.  இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுகாதாரமற்ற காற்று  

காடுகளில் உள்ள பல்வேறு வகையான மரங்களையும், செடி கொடிகளையும் அழித்துவிட்டு, போதிய மரங்களை நடுவதையும் தவிர்த்துவிட்டு கார், பங்கலா என்று தற்காலிக சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுவரும் மனிதர்கள் தங்களது உயிரைக் காக்க சுத்தமான காற்றும் முக்கியம் என்பதை உணர மற்றுக்கின்றனர். அத்தகைய மனிதர்கள் சமீபத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்துபோன கொரோனா நோயாளிகளின் நிலையை எண்ணிப்பார்த்து  அத்தகைய நிலை நமக்கு ஏற்படாத வண்ணம் மரங்களின் மகத்துவத்தை உணர்ந்து காடுகளை பாதுகாக்கவும், மரங்களை நடவும் தேவையானவற்றை செய்ய வேண்டும்.

இவ்வுலகம் அனைத்து உயிர்களுக்குமானது

நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகமானது  மனிதர்களுக்கு மட்டுமன்று. இவ்வுலகம் அனைத்து உயிர்களுக்குமானது. அவ்வுயிர்களுள் மனிதனும் ஓர் உயிர். அவ்வளவே. எனவே அனைத்து உயிர்களும் வாழ உகந்த சூழ்நிலை இருந்தால் மட்டுமே மனிதர்களான நாமும் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். அதை தவிர்த்து இயற்கை படைத்த காடு, மலைகள், தாவரங்கள் ஆகியவற்றையும் அவைகளை சார்ந்து வாழும் உயிரினங்களையும் அழித்துவிட்டு கோடி கணக்கில் பணம் சம்பாதித்து தான் மட்டும் சொகுசாக வாழ்ந்துவிடாலம் என்று எண்ணினால் அது மிகவும் மூடத்தனமானதாகும். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு கொரோனா பெருந்தொற்றாகும்.

நீ எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், எவ்வளவு சொகுசான வாழ்க்கை வாழ்ந்தாலும் உனக்கு தேவையானது சுத்தமான காற்றும், தூய நீரும், நஞ்சில்லா உணவும்தான். அது இல்லையேல் நீ எவ்வளவு பணம் வைத்திருந்தும் பயனில்லை. அம்மூன்றும் சாத்தியம் எப்போது? நீ சுற்றுச் சூழலை பாதுகாத்து அதோடு இணைந்து வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம். இந்த உண்மையை புரிந்துகொண்டு வாழ்ந்தால்தான் நம் ஒவ்வொருவரின் வாழ்வும் சிறக்கும்.

ஆகவே காடுமலைகள் அழிக்கப்பட்டால் நமக்கென்ன? காட்டு விலங்கினங்கள் அழிக்கப்பட்டால் நமக்கென்ன?  என்று கூறி கடந்து செல்வதை தவிர்த்து நாம் பொறுப்புடன் செயல்பட இந்த சுற்றுச்சூழல் தினம் முதல் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் வாருங்கள்!!!  

பல்லுயிர் போற்றி பல்லாண்டு வாழ்வோமாக!!!

#பல்லுயிர் #சுற்றுச்சூழல்
#காடு #மலைகள் #கொரோனா
#சுற்றுச்சூழல்தினம்

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...