Search This Blog

Saturday, 13 February 2021

கடமைகளை செய்யத்தவறும் அதிகாரிகளால் சுற்றுச்சூழல் அழிந்து வரும் அவலம்

தமிழகத்தில் பல்வேறு  இடங்களில் அரசுக்கு  சொந்தமான  கனிம  வளங்கள் ஒரு சில  கயவர்கள் கூடாரத்தால் சூரையாடப்பட்டு வருகின்றன. சட்டத்தின்  ஆட்சியை நிலைநாட்ட  அரசு  துறைகள் பல இருந்தும் கயவர்கள்  கூட்டத்தின் சுரண்டல்கள் தொடர்ந்து கொண்டுதான்  வருகிறது. காரணம்  சட்டத்தின் ஆட்சியை  நிலைநாட்டுவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு சில அரசு அதிகாரிகளே சூரையாடும் கயவர்களுக்கு துணை போவதுதான். அக்கயவர்கள் வீசும் எலும்புத்  துண்டுக்கு  ஆசைப்பட்டு சம்பளம்  கொடுக்கும்  அரசுக்கே  துரோகம் இழைக்கின்றனர். சுரண்டலை  தடுக்கவும்,  சுரண்டல்களில் ஈடுபடுவோர்களின்  மீது  சட்ட  நடவடிக்கை  எடுக்கவேண்டிய அரசு  அதிகாரிகளே சுரண்டலை  ஊக்குவிக்கும்  வகையில் செயல்படுவதால்  இயற்கை அளித்த கனிம  வளங்கள் கண்மூடித்தனமாக  சுரண்டப்பட்டு  தமிழகத்தில் பல்வேறு  இடங்களில் சுற்றுச்சூழல் சீரழிந்து  வருகிறது. 

கடமைகளை செய்யத்  தவறும் கண்காணிப்புக்  குழுக்கள் 
கனிமங்களின்  சுரண்டல்களைத்  தடுக்க வட்டார  மற்றும்  மாவட்ட வாரியாக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டும் தமிழகத்தில் பல்வேறு  ஊர்களில் அரசுக்கு  சொந்தமான  இடங்களில் கனிமங்களை வெட்டியெடுக்கப்பட்டு  சூரையாடப்படுவது  தொடர்ந்தே  வருகிறது. வட்டாட்சியர் தலைமையில் செயல்படும்  கண்காணிப்புக்  குழுவில் காவல் துறைகனமம் & சுங்கத்துறை,  வருவாய் துறைமாசு கட்டுப்பாட்டுத்  துறைபோக்குவரத்துத்துறை சார்ந்த  அதிகாரிகளும்  அங்கம்  வகிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் கண்காணிப்புக்  குழுவில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்உதவி  இயக்குநர்கனமம் & சுங்கத்துறைமாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆகியோர் அங்கம்  வகிக்கின்றனர். அப்படியிருந்தும்  கண்காணிப்பு  குழுவில் அங்கம்  வகிக்கும்  அதிகாரிகள்  தங்களது  கடமைகளை சரி வர செய்யாத  காரணத்தால்  இன்றளவும் இயற்கை  அளித்த  கனிம  வளங்கள்  கண்மூடித்தனமான  வகையில்  சூரையாடப்பட்டு   வருகின்றன. 

 சுற்றுச்சூழல்  பாதிப்பு
கண்மூடித்தனமான  பேராசையால்  கனிமங்களை  வெட்டியெடுக்கும்  குவாரி உரிமையாளர்கள்  நிலத்தடி  நீர்மட்டத்தை  தாண்டிய  ஆழத்திலும்  சக்தி  வாய்ந்த  வெடிகளை  வைத்து  கனிமங்களை வெட்டி வருவதால் நிலத்தடி  நீரும்  மாசு  அடைந்து  வருகிறது.  மேலும் அதனால் அவ்விடத்தில்  சுற்றியுள்ள  பல்லுயிர்களும் (தாவரங்களும்,  உயிரினங்களும்)பாதிப்படைந்து சுற்றுச்சூழல் அழிந்து வருகின்றன. இயற்கை  எழிலோடு  பல வகை  தாவரங்கள்  மற்றும்  அதனைச் சார்ந்து  வாழ்ந்து  வந்த  உயிரினங்கள்  பல அழிந்துவரும்  சூழல்  நிலவி  தற்போது  மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும்  வாழ்வாதார  பிரச்சனைகளையும்  ஏற்படுத்த  தொடங்கிவிட்டது.  இதனால் கிராமங்களிலும் சுத்தமான  நீர்,  சுகாதாரமான  காற்று  ஆகியவை  அறிதாக  தொடங்கி வருகிறது.

 அரசு  அதிகாரிகளின்  கடமை

ட்டார  கண்காணிப்பு  மற்றும் மாவட்ட  கண்காணிப்புக்  குழுவில்  அங்கம்  வகிக்கும்  அதிகாரிகள் அனைவரும்  இயற்கை குறித்த புரிந்துணர்வை  வளர்த்துக்கொண்டு அவற்றை  காக்கும்  பொருட்டு தனது  கடமைகளை செவ்வன  செய்ய  உறுதிகொள்ள வேண்டும். கனிமங்களை  திருடிச் செல்பவர்கள் தேசதுரோகிகள் ஆவர். அத்தகைய தேசதுரோகிகளின் மீது சட்டப்படி  நடவடிக்கை  எடுக்கத்  தவறுவது  என்பது தனது  கடமைகளிலிருந்து தவறுவதாகும்  என்பதை  அரசு  அதிகாரிகள் அனைவரும்  உணர்ந்து இயற்கை அளித்த கனிமங்களை பாதுகாக்க உறுதி ஏற்பது ஒவ்வொரு அரசு அதிகாரிகளின் கடமையாகும்.

 #இயற்கை #கனிமவளம் #நிலத்தடிநீர் #கண்காணிப்புக்குழு #சுற்றுச்சூழல்


மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...