![]() |
இயற்கை விவசாயி |
அது எப்படி சாத்தியம் என்று நினைக்கிரீர்களா? 100% சதவீதம் சாத்தியம். இயற்கை
முறையில் விவசாயம் செய்யும் விவசாயி இரசாயன உரம் & பூச்சிகொள்ளிகளை பயன்படுத்தமாட்டான் . ஆகையால் அவன்
உற்பத்தி செய்த பொருட்களில் இமியளவும் நஞ்சு இருக்காது. எனவே நஞ்சில்லா உணவை உண்டு
அவன் ஆரோக்கியமாக இருப்பான். இன்னொரு விசயம்.. அவன் ஆரோக்கியமாக இருக்க தனியாக யோகா
செய்ய வேண்டியதில்லை... உடற்பயிற்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் அவை அனைத்தும்
அவனுடைய வாழ்க்கை முறையில் அடங்கிவிட்டது. அதாவது அவன் விவசாயம் செய்ய மேற்கொள்ளும்
நடவடிக்கைகளே ஒரு உடற்பயிற்சியாகும். நகர வாழ் மக்கள் போல உடற்பயிற்ச்சி என்ற பெயரில்
அவனுக்கு நேரத்தை வீணடிக்கும் தேவை வராது.
எனவே உண்மையான
இயற்கை விவசாயியால் மட்டுமே முறையான வாழ்க்கை வாழ முடியும். அவர்கள் வாழும் வாழ்க்கை
மட்டுமே நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையை தற்போது பிரதிபளிக்கிறது. எனவே அத்தகைய வாழ்க்கை முறை மூலம் உற்பத்தியாகும் பொருட்களை பயன்படுத்துபவர்களும் ஆரோக்கியமாக வாழும் வாய்ப்பை பெறுவார்கள். ஆனால் அத்தகைய
விவசாயிகளுக்கு தேவையான அங்கிகாரம் கிடைப்பதில்லை என்பதை நினைத்தால்தான் வருத்தமளிக்கிறது.
#விவசாயம் #இயற்கைவிவசாயி #விவசாயி
Good analysis!
ReplyDeleteThank You
Delete