Search This Blog

Monday, 20 May 2019

எவன்டா மனிதன்?



விவசாயத்தை அழித்து கல் குவாரி அமைப்பவன் மனிதனா?
இயற்கை வழி விவசாயம் செய்பவன் மனிதனா?

ஏழையின் வயிற்றை அடித்து பிழைப்பவன் மனிதனா?
ஏழையின் உரிமைக்காக குரல் கொடுப்பவன் மனிதனா?

ஏரியின் மண்ணை திருடி பல கோடி சம்பாதிப்பவன் மனிதனா?
அவனை சட்டத்தின் முன் அடையாளம் காட்டுபவன் மனிதனா?

சில கோடி ரூபாய்க்கு இயற்கையை அழிப்பவன் மனிதனா?
அதனை போராடி தடுப்பவன் மனிதனா?  

தான் சம்பாதிக்க பல்லுயிர்களை அழிப்பவன் மனிதனா?
இயற்கை  விவசாயம் செய்து பல்லுயிர்களை பாதுகாப்பவன் மனிதனா?

அழிப்பவன் மனிதனா? ஆக்குபவன் மனிதனா?
சட்டத்தை மிதிப்பவன் மனிதனா? மதிப்பவன் மனிதனா?





குறிப்பு: சி.பிரபு, கிராமங்களின் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்கும் கயவர்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு துணைபோகும் துரோகிகளுக்கு எதிராகவும் வழக்காடும் வழக்கறிஞர். 

Saturday, 18 May 2019

கிராமங்களை மீட்பது நமது கடமை


ஆற்று மணலை அபகரித்து, ஏரி மண்ணையும் வெட்டியெடுத்து , ஏரிக்கு செல்லும் ஓடைகளை நாசமாக்கி , ஏரி , விவசாய நிலம் மற்றும் காடுகளை ஒட்டி உள்ள பகுதிகளில் உள்ள கருங்கற்களை வெட்டியெடுத்து பணம் சம்பாதிப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாக செயல்படும் ஒரு சில நபர்களால் கிராமங்களில் மட்டும் கிடைத்த சுத்தமான குடிநீரும், சுத்தமான காற்றும் நாளுக்கு நாள் அரிதாகிக் கொண்டே வருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அத்தகைய நபர்களுக்கு அரசு அதிகாரிகளும் உடைந்தையாக இருந்துகொண்டு நமது நாட்டிற்கும்  நமது மக்களுக்கும் மிகப்பெறிய துரோகம் செய்து வருகின்றனர்.  பணம் சம்பாதிப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வரும் அத்தகைய கயவர்களையும் அதற்கு துணையாக நிற்கும் துரோகிகளையும் தண்டித்து கிராமங்களை காப்பாற்றுவது மிகவும் அவசியமாகும்.

சுத்தமான நீர் கிடைக்குமா?
ஒரு சில நபர்களின் பேராசையால் தற்போது தமிழ்நாட்டில் பல ஆறுகளில் கட்டுப்பாடின்றி மணல் எடுத்ததால் தற்போது ஆற்றில் மணல் அல்லவே தடை என்ற நிலை வந்துவிட்டது. காரணம் எப்படியேனும் பணத்தை சம்பாதித்துவிட வேண்டும் என்ற அற்ப ஆசை. அதே போன்று தற்போது கிராமங்களில் உள்ள ஏரிகளையும் விட்டுவைக்கவில்லை. ஏரிக்கு செல்லும் ஓடைகளை நாசமாக்கி அங்கே உள்ள மண் மற்றும் கற்களை வெட்டியெடுத்து அவைகளையும் விற்று பணம் சம்பாதிக்க முற்பட்டுவிட்டனர் ஒரு சில மூடர்கள். 
ஆற்று நீர்பாசனம் இல்லாத கிராமங்களில் ஏரி நீர் பாசனத்தை நம்பிதான் விவசாயமே நடந்துவருகிறது. இந்நிலையில் அத்தகைய ஏரியில் உள்ள மண்ணை வெட்டியெடுத்து அதையும் விற்று சம்பாதிக்கும் அற்ப வேலையில் இறங்கியுள்ளனர் ஒரு சில துரோகிகள். இதனால் விவசாயத்திற்கான நீர் ஆதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நிலத்தடி நீறும் கீழே சென்றுவிட்டது. இத்தகைய நிலை நீடித்து வருமானல் தற்போது சுத்தமான குடிநீரை பருகிவரும் பல கிராமங்கள் தண்ணீர் பாட்டில்களை நம்பிதான் இருக்க வேண்டி வரும்.

சுத்தமான காற்றும் கேள்விக்குறியே?
கிராமம் என்றாலே நினைவுக்கு வருவது சுத்தமான காற்றுதான். ஆனால் அதுவும் இப்பொழுது கேள்விக்குறியாகிவிட்டது. ஒரு சில நபர்களின் பேராசையாலும், ஒரு சில நம்பிக்கை துரோகிகளாலும் (அரசு அதிகாரிகளாலும்) கருங்கற்களை வெட்டியெடுக்கும் பெயரில் சக்தி வாய்ந்த வெடிகளை வைத்தும், வெட்டியெடுத்த கற்களை அரைப்பதற்காக ராக்க்ஷச இயந்திரங்களை இயக்கி புகைகளைக் கக்கி கிராம சுற்றுப்புரத்தையே மாசு அடைய வைக்கின்றனர்.  விவசாய நிலத்தில் உள்ள பயிர்கள் புகையின் மூலம் வெளியேற்றப்பட்ட ரசாயன துகள்களாக காட்சியளிக்கின்றன. இதன் மூலம் கிராமத்தில் வாழும் மனிதர்களும் அசுத்தமான காற்றை சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாம் நகரத்திலிருந்து நமது கிராமங்களுக்கு செல்லும்போதெல்லாம் இயற்கையின் மடியைத் தேடி செல்கின்ற உணர்வுகள் இருந்தது. ஆனால் அத்தகைய நிலை தற்போது பல கிராமங்களில் மாறி வருகிறது. ஒரு சில பேராசைக்காரர்களாலும், நமது வரிப்பணத்தில் சம்பளம் வங்கிக்கொண்டு நமக்கு துரோகம் செய்து வரும் ஒரு சில அரசு அதிகாரிகளாலும் நாம் நமது கிராமத்தின் பெருமைகளான ஆறு, ஏரி, ஓடை, குட்டை, மலைகள், பாறைகள், காடுகள் ஆகியவற்றை இழந்துகொண்டு வருகிறோம். கூடவே சுத்தமான காற்றையும், குடிநீரையும் சேர்த்தே இழந்து வருகிறோம். எனவே அத்தகைய செயல்களில் ஈடுபட்டுவரும் கயவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் அவர்க்ளை நிறுத்தி நமது கிராமங்களின் அடையாளங்களை காப்பது நம்மில் ஒவ்வொருவரின் கடமையாகும். இதனை நாம் செய்ய தவறிவிட்டால் நமது குழந்தைகளுக்கு ஏரி என்று காட்ட ஏரி இருக்காது, கிணற்றில் நீரை காட்ட நீர் இருக்காது, மலை என்று காட்ட மலை இருக்காது, ஓடை என்றால் என்ன என்று புரிய வைக்க ஓடையே இருக்காது. எனவே இவைகளைக் காப்பாற்றுவது நமது கடமையாகும்.

#காற்று #நீர்# ஆறு #ஏரி #ஓடை #குட்டை #மலைகள்#பாறைகள் #காடுகள்
#சுற்றுச்சூழல் #கிராமம்

குறிப்பு: சி.பிரபு, கிராமங்களின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கயவர்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு துணைபோகும் துரோகிகளுக்கு எதிராகவும் வழக்காடும் வழக்கறிஞர்.

Sunday, 5 May 2019

தமிழகத்தில் உள்ளாட்சியின் அதிகாரம் அதிகாரிகள் கையில்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஊராட்சியிலும் நகராட்சி மன்றங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பதிலாக அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி உள்ளாட்சி தேர்தல் நடத்த தாமதமாக்கிக் கொண்டே இருக்கின்றனர். இதனால் நகரங்களை காட்டிலும் கிராமங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகளிடம் உள்ளூர் பிரச்சனைகள் குறித்த புரிந்துணர்வு இல்லை
அரசு நியமித்துள்ள அதிகாரிகளான வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் செயல்படும் சிறப்பு அதிகாரிகளுக்கு கிராமங்கள் குறித்த தேவைகளை அறியும் அளவிற்கு அவர்களுக்கு புரிந்துணர்வு இல்லாத காரணத்தால் கிராமங்களின் பிர்ச்சணைகள் புரியாத நிலையில் அவற்றிற்கு தீர்வு காண முடியவதில்லை.
எடுத்துக்காட்டாக கிராமங்களில் ஓடைகள், ஏரிகள், நீர்பிடி பகுதி, குளம், குட்டைகள் ஆகியவை எங்கெங்கு உள்ளது என்பதை கிராம மக்களிடம் கலந்து ஆலோசணை செய்து அவற்றிற்கேற்ப தூர் வாருதல், சீரமைத்தல், ஆக்கிரமிப்பை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தவறுகின்றனர். மேலும் நிலத்தடி நீரை பெருக்கும் நோக்கத்தோடு தடுப்பணைகள் கட்டுதல், குளங்கள் வெட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபடும்போது இவ்வதிகாரிகள் கிராம மக்களிடம் கலந்து ஆலோசணை செய்யாமல் தன்னிச்சையாக தேவையில்லாத இடத்தில் அப்பணிகளில் செய்யப்படுகின்றன. இத்தகைய செயலால் அரசின் பணம் வீணாவதோடு நில்லாமல் மழை நீர் வீணாகும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இதுவே முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தி மக்களின் பிரதிநிதிகள் உள்ளாட்சி நிர்வாகத்தை நடத்தும்போது, பிரதிநிதி அப்பகுதியை சேர்ந்தவர் என்பதால் கிராமத்தில் ஆங்காங்கே உள்ள பிரச்சணைகளை அறிந்து அப்பிரச்சணைக்கு ஏற்றவாறு சிறப்பாக செயல்பட ஏதுவாக இருக்கும். மேலும் அவர்கள் நாள்தோரும் மக்களின் பார்வையில் இருப்பதால் மக்களுக்கு பதில் சொல்லும் நிலையில் இருப்பார்கள்.

ஆனால் தற்போது பொறுப்பில் உள்ள தனி அலுவலர்களோ பொறுப்பற்ற பல காரியங்களை அப்பகுதிகளின் தேவையை உணராமல் செய்து வருகின்றனர்.  
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிளைகள் ஊராட்சி) அவர்கள் கட்டுப்பாட்டில் செயல்படும் தனி அலுவலர்கள் கிராம ஊராட்சியின் தேவைகளை நேரடியாக பார்வையிடுவதையும் தவர்த்து வருகிறார்கள். கேட்டால் அவர்களுக்கு 10க்கும் மேற்பட்ட கிராமங்களை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் எப்போது?

தமிழக அரசுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் இருப்பதுபோல தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒருசில காரணங்களைக் காட்டி உயர்நீதிமன்றத்திடமும் உச்சநீதிமன்றத்திடமும் கால அவகாசம் கேட்டுகொண்டப்டியேதான் இருக்கின்றது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மூன்று மாத கால அவகாசம் கேட்டு மனு அளித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உள்ளாட்சி வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபிறகே நடத்த முடியும் என்று உச்சநீதிமன்றத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட அடுத்த மூன்று மாத காலம் கடந்த பிறகும் உள்ளாட்சி தேர்தல் நடப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எனவே தமிழகத்தில் தற்போதைக்கு உள்ளாட்சிகளில் மக்களின் ஆட்சிக்கு வழியில்லை. ஒரு சில அதிகாரிகளின் அதிகாரத்தின் பிடியிலேயே உள்ளாட்சி அமைப்புகள் மேலும் சில காலம் சிக்கி தவிக்க நேரிடும்போல் தெரிகிறது. 

ஆசிரியர் குறிப்பு: சி.பிரபு, வழக்கறிஞர்

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...