Search This Blog

Sunday, 28 July 2019

சட்டத்தால் முடியாதா?... முடியாமல் போகட்டும்... யாம் முயற்சி செய்வோம்...

அதிகாரிகள் அனைவரும் பணத்திற்கு விலைபோவார்களாம்..
அவர்கள் திருடணுக்குத்தான் துணைபோவார்களாம்..
சட்டத்தை வைத்து ஒன்னும் பண்ணமுடியாதாம்..
அதனால திருடர்களுக்கும், தேசத்திற்கு துரோகம் புரியும் அதிகாரிகளுக்கும் ஆமாம் சாமி போடனுமாம்..

இவ்வாறு கூறுபவர்கள் எமக்கு நல்ல புத்திமதி கூறுகிறார்களாம்...

இந்த புத்திமதி கூறுகிறவர்கள் சட்டத்தைப் பயன்படுத்தியதில்லை..

முயற்சி செய்ததில்லை... ஆனால் புத்திமதி மட்டும் சொல்வார்களாம்..
அதனை யாம் கேட்க வேண்டுமாம்...

எமக்கு வெற்றி கிட்டாமல் போகட்டும்,
திருடர்கள் திருடிகொண்டே போகட்டும்,
அரசு அதிகாரிகள் துரோகம் செய்துகொண்டே போகட்டும்,

யாம் முயற்சி செய்துகொண்டே இருப்போம்,
சட்டத்தின் கதவுகளை இயன்ற வரை தட்டிக்கொண்டே இருப்போம்..
முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்...
திருடனுக்கு மீண்டும் மீண்டும் திருட தைரியம் இருக்கும்போது,
அதனை தடுக்க எமது முயற்சி ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கக் கூடாது???

சட்டத்தால் முடியாதா? முடியாமல் போகட்டும்...

யாம் முயற்சி செய்வோம்.. எமக்கு இறைவன் துணை இருப்பான்... சட்டப்படி போராட நினைக்கும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் துணையிருப்பார்கள்...

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...