Search This Blog

Saturday, 16 October 2021

திருப்பெயர் ஊராட்சி தேர்தல் 2021: பணநாயகம் வென்றது...

 

தேர்தல் Image/Credit:iStockphoto
ஆனாலும் ஜனநாயகம் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது

ஆரம்பத்தில் ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்த எனது அண்ணன் திரு.அருள் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் தேர்தல் நெறுங்க நெறுங்க திருப்பெயர் ஊராட்சி பாமர மக்களின் உள்ளங்களை பொய், பித்தலாட்டம், ஓசி உணவு, ஓசி மது, வாக்குக்கு பணம், அச்சுறுத்தல் போன்றவற்றின் மூலம் சலவை செய்து பணநாயகத்தை அரங்கேற்றிய நபர் வெற்றிபெற்றுள்ளார்.

சட்டவிரோதமான செயல்கள் மூலம் தலைவர் என்ற அந்தஸ்த்தை பெற்றிருக்கலாம்.  ஆனால் வெற்றி பெற்ற அந்த நபரின் மனசாட்சிக்கே  தெரியும் அவர் அந்த பதவிக்கு அருகதை இல்லாதவர் என்று. அவர் சட்டத்திற்கு புரம்பான வழிகளை கையாண்டு இருந்தும் மக்கள் அவருக்கு அதிகப்படியான வாக்குகள் அளித்து தலைவராக்கியுள்ளனர். அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு மக்கள் சேவைகளை செய்ய முடியாது என்று கூறிவிட்டு விலகிக்கொள்ள இயலாது. ஏனென்றால் சட்டம் சொல்லவில்லை “வாக்குக்கு பணம் கொடு என்று”... சட்டம் சொல்லவில்லை “ஓசி மது, ஓசி உணவு, ஓசி புடவை கொடு என்று”.... ஆனால் சட்டம் சொல்கிறது “தலைவர் என்பவர் மக்கள் சேவை செய்ய மட்டுமே என்று”.

எனவே பணநாயகம் வென்றிருந்தாலும் பல இலட்சங்கள் செலவழித்து பதவிக்கு வந்தவர் மக்கள் சேவைகளை இலஞ்சமின்றியே செய்தாக வேண்டும். வேறு வழியில்லை ராஜா!!! தலைவர் பதவியை காசு கொடுத்து வாங்கியபின் அந்த பொறுப்பிலிருந்து சாதாரணமாக விலகிவிடலாம் என்ற பகல் கனவு காண வேண்டாம் ராஜா😃😃😃!!!   

ஜனநாயகம் இன்று தோல்வியடைந்ததுபோல் தெரியலாம் ஆனால் ஒருநாள் வெல்லும்... மக்கள் அனைவரும் உனது பண திருமிருக்கு அடிமை ஆகவில்லை. 96 நபர்கள் ஒத்த ரூபாய் கூட பெறாமல் ஜனநாயக முறையில் எனது அண்ணன் அருள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ளவும். இப்போது நீ அதிகப்படியான அப்பாவி மக்களை ஏமாற்றியிருக்கலாம். ஆனால் இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருக்காது ராஜா! மக்கள் விழிப்படைவார்கள்.. ஜனநாயகம் ஒரு நாள் அமோக வெற்றிபெரும்.  

அரசியல் என்பது ஏமாற்று கிடையாது ராஜா! அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்கு நன்மை செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பு!!! இந்த உண்மையை ஒரு நாள் உன்னை உணர வைப்போம் தலைவரே... இன்று இல்லையேல் நாளை ! 

1 comment:

  1. ஊராட்சி தேர்தலில் அரசியல் ஏன்?? எப்படி!!

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...